Wednesday, September 3, 2008

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்


பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஒரு வரலாற்றுச் சாதனையாளர்.
தமிழ்நலன் காக்கவும் தமிழுணர்வைப் பரப்பவும் உலகைப் பலமுறை வலம் வந்த பெருந்தகை. தமிழ்வளர்ச்சிக்காக நாளும் உழைத்து வரும் உயர்பெரும்புலவர்.
பல்வேறு சூழல்களில் தமிழ் உரிமை காப்பதற்குப் போராட்டங்கள் நடத்திப் பலமுறை சிறை சென்ற செம்மல்.
சுருங்கச் சொன்னால்” கெடல் எங்கே தமிழின் நலன், அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செயக” எனும் பாவேந்தரின் பாடல் இவர் வாழ்வுநெறியாக அமைந்துள்ளது எனலாம்.
தமிழ்ப்போராளி;உலகத் தமிழ்த்தூதர்;என்னும இரு சிறப்பியல்புகளும் இவரது வாழ்க்கையை விளக்கப் போதுமானவை.